பி.டி. கத்தரியே போ...போ....

Friday, January 22, 2010




கத்தரி செடியெல்லாம் காய்களாய் காய்த்து தொங்கும், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்ற கவர்ச்சி வாசகங்களுடன் பாமர விவசாயிகளுக்கு மாயவலை விரித்து வருகிறது பி.டி. கத்தரிக்காயை (மரபணு மாற்ற கத்தரிக்காய்) அறிமுகம் செய்யும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம்.

சமீபகாலமாக புதிய வகை பூச்சி கள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக் காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளிக்கப்படுகின்றன. அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துகிறோம் என்ற சப்பைகட்டு வாதங்கள் வேறு.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்தி­ருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி! அதாவது பல்வ­லி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!. இதற்கு ஜால்ரா போடுகின்றன இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள்.

இந்தியாவின் 5 வேளாண் பல்கலைக்கழகங்களில் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்பட) பி.டி. கத்தரி ஆய்வுப்பணிகள் முடிவுற்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளின் நாயகன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சர்ச்ச்சைகளின் நாயகன் ஜெய்ராம் ரமேஷுன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் தான் இக்குழுமம் இயங்கி வருகிறது.

தில்லி, கோல்கத்தா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுப்பின.

கத்தரியை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு. அதை விற்கும் செய்யும் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு. உண்ணும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு. ஆனால், பி.டி. கத்தரியை அறிமுகம் செய்தே தீருவோம் என அடம்பிடித்து வருகிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு வால்பிடிக்கின்றனர் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், மாநில வேளாண் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்.

பி.டி. கத்தரிக்கு அமைச்சர்களே வால்பிடிப்பது ஏன்?. மத்தியில் பிரதான எதிர்கட்சியான பாஜகவும், மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல நடித்து மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதன் ரகசியம் என்ன?.
பி.டி. கத்தரியின் உரிமையாளரான மான்சான்டோ நிறுவனம் கொட்டும் பண மழை தான்.

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா­னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எ­லிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரல் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று இ.ப. விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இங்லாந்து, பிரான்ஸ், இத்தா­லி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்ற விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான். ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

இத்தனை நாடுகளும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகள் பணத்துக்காக பல்லக்கு தூக்குவது வெட்கக்கேடான செயல். பணமழையில் நனைய வேண்டும் என ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்(அலைக்கற்றை), முத்திரைத்தாள் ஊழல், போபர்ஸ் ஊழல் என இன்னும் புதுப்புது ஊழல்கள்.
உணவை விஷமாக்கும் பி.டி. கத்தரியில் மட்டும் காசுபார்க்க வேண்டாம். தயவுசெய்து பி.டி. கத்தரிக்கு தடைபோடுங்கள் மாண்புமிகு அரசியல்கோமாளிகளே....