நித்யானந்தர் எனது பார்வையில்....
Thursday, March 4, 2010
காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீணி கிடைத்திருக்கிறது. காட்சி ஊடகங்களின் ரசிகர்களுக்கு அதைவிட கூடுதல் உற்சாகம். திரையரங்குக்குச் செல்லாமலே நீல படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. எல்லாம் நித்யானந்த சுவாமிகள் செய்த புண்ணியம்.
நித்தியானந்தர் செய்தது சரியா?, தவறா? என டீக்கடைகள் தோறும் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. சாமியார் என்றாலும் பாதிரியார் என்றாலும் இந்திரலோகத்தில் இருந்தோ அல்லது பரலோகத்தில் இருந்தோ பூலோகத்துக்கு குதித்துவந்தவர்களா?. தாயின் வயிற்றில் கருவாய் உருவாகி, அதிகபட்சம் ஒன்பரை மாதங்கள் உள்ளேயே வளர்ந்து குழந்தையாய் பிறந்தவர்கள் தானே?.
சாமியார்களும் மனிதர்கள்தான் என்பதை மறந்து, அவர்களை கடவுளின் மறுவுருமாகவே வழிபடும் பக்தர்கள் இருக்கும் வரை ஒரு நித்தியானந்தர் அல்ல ஓராயிரம் நித்தியானந்தர் தோன்றிக்கொண்டே இருப்பதை யாராலும் தடுக்க இயலாது.
இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், இன்பம் வரும்போது கடவுளை துதிக்கும் பக்தர்கள், துன்பம் வரும்போது இதுபோன்ற நித்தியானந்தர்களை அணுகுகின்றனர். பக்தர்களின் குறிப்பாக பெண் பக்தர்களிடம் இன்ப, துன்பங்களை அறிந்து, அவர்களுக்கு சகலவித ஆசி வழங்குகின்றனர் சாமியார்கள்.
கருவறை முதல் படுக்கைஅறை வரை ஆசி வழங்குகின்றனர் சாமியார்கள். கருவறைக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், படுக்கையறைக்கு செல்லும்போது பெண் பக்தர்கள் யோசிக்க வேண்டாமா?. ஒருமுறை சென்றால் தவறுதலாக அல்லது மிரட்டப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டதாக கருதலாம். ஆனால், இதுபோன்ற போலி மடங்களில் காமிரா கண்களில் சாமியார்களுடன் சிக்கும் பெண்கள் பலமுறை செல்பவர்களாகத்தானே இருக்கிறார்கள்.
நித்யானந்தர் மீது ஒரு வழக்கு போட்டால், இதுபோன்ற பக்தர்கள் மீது ஆயிரம் வழக்கு போட வேண்டும். அப்போது தான் பக்தர்கள் திருந்துவார்கள். பக்தர்கள் திருந்திவிட்டால் சாமியார்கள் தானாக திருந்திவிடுவார்கள். இறைவன் ஒருவர் இருக்கிறார் என்றால் அவரிடம் நேரடியாக பேசுங்கள். அவரிடம் பேசுவதற்கு இடைத்தரகரை நாடுவது ஏன்?
நித்யானந்தரா இப்படி செய்துவிட்டார் என அவரது பக்தர்களுக்கு மட்டுமல்ல. பலருக்கும் அதிர்ச்சி. ஆனால், அவரும் மனிதர் தான் என்பதை மக்கள் மறந்தது ஏனோ?.
இயற்கையை செயற்கையால் கட்டுப்படுத்த இயலாது என்பது இயற்கை கோட்பாடு. பெண்ணாசை வருவது இயற்கை. சாமியார் வேசம் என்பது செயற்கை. இப்போது மீண்டும் ஒருமுறை ஆழமாக யோசித்து பாருங்கள். இயற்கையை செயற்கையால் கட்டுப்படுத்த இயலாது.
Posted by நெல்லை பொடியன் at 12:02 AM 2 comments
Labels: நித்யானந்தர், பக்தி, மதம்
தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள்!
Monday, March 1, 2010
தினமணி கதிரில் 28.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்
மலேசியாவில் மக்கள்புரட்சியை ஏற்படுத்தி அரசு பதவியை கைப்பற்றிய முதல் தமிழர். அந்நாட்டின் சுதந்திர வரலாற்றில் உயர்பதவிக்கு வந்த முதல் தமிழர் என்ற முத்திரையை பதித்தவர். குடும்பம், அரசியல், பண பலம் உள்ளிட்ட எவ்வித பின்புலமும் இன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அந்தப் புரட்சித் தமிழர். விடுதலைப்புலிகளின் முதல்நிலை தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தவர். மலேசிய தமிழர்களால் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல்கொடுத்து வருபவர். அவர் தான் பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி.நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக இருக்கும் ராமசாமி, இப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். கோவையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்திருந்தார் ராமசாமி. கோவையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை பேட்டிக்காக அணுகினோம்.எளிமையான உடையில் சாதாரண மனிதனைப் போல காட்சி... அவரிடமோ விசாலமான பார்வை, தொலைநோக்கு எண்ணம் பளிச்சிட்டது. இனி அவரிடம் பேசியதிலிருந்து..
Last Updated :
கல்லூரி பேராசிரியராக இருந்த நீங்கள் அரசியலுக்கு வந்தது எப்படி?அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான், மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன். மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன். இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன். ஆனாலும், அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை. நேரு, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன். மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.
Posted by நெல்லை பொடியன் at 10:38 PM 1 comments
Labels: தமிழர்கள், தமிழ், பேராசிரியர் ராமசாமி, மலேசியா
Subscribe to:
Posts (Atom)