போராட்டமா? மிரட்டல்களா?

Thursday, March 10, 2011


தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
கடமையைச் செய்துவிட்டு, உரிமைக்காகப் போராடுவது தான் தொழிற்சங்கங்களின் சித்தாந்தம். ஆனால், இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. கடமையைச் சரிவரச் செய்யாமல் உரிமைக்காகத் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஒப்பந்த ஊழியராக இருக்கும்போது 12 மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வருத்தி உழைத்த தொழிலாளர்கள், நிரந்தரப் பணி கிடைத்ததும் 2 மணி நேரம்கூட உழைக்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த அளவுக்கு மனிதநேயம் கெட்டுவிட்டது என்பதை எண்ணும்போது மனம் வெதும்புகிறது'' என தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் தனது கருத்தை வருத்தத்துடன் பதிவுசெய்தார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள முன்னணி தொழிற்சங்கத்தில் 14 ஆண்டுகளாகப் போட்டியின்றித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவர்.

ஆயுதத்தைத் தீட்டுங்கள்!

தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம் 
எந்தக் கட்சி யாருடன் கூட்டணி சேரும்? எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்? என தமிழக வீதிகளில், திண்ணைகளில், மரத்தடிகளில் கூடும்  மனிதர்களின் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
 எந்த ஒரு காட்சி ஊடகத்தையோ அல்லது அச்சு ஊடகத்தையோ பார்த்தாலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய செய்திகள்தான் பிரதான இடத்தைப் பிடித்து வருகின்றன.
 இதையெல்லாம் பார்த்ததும் மக்களில் பலருக்குத் தேர்தல் திருவிழா நெருங்கிவிட்டதாக எண்ணம். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் கிடைத்த அனுபவம் தான் இதற்குக் காரணம்.
 ஆனால், அரசியல்வாதிகளுக்கோ போர்க்களம் நெருங்குவதைப் போன்ற எண்ணம். சுதந்திரத்துக்குப்பின் இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழகத் தேர்தல் களம் கடுமையாகியுள்ளது. 
ஆயுதத்தைத் தீட்டுங்கள்!