தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள்!

Monday, March 1, 2010

தினமணி கதிரில் 28.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்

மலேசியாவில் மக்கள்புரட்சியை ஏற்படுத்தி அரசு ​பதவியை கைப்பற்றிய முதல் தமிழர்.​ அந்நாட்டின் சுதந்திர வரலாற்றில் உயர்பதவிக்கு வந்த முதல் தமிழர் என்ற முத்திரையை பதித்தவர்.​ குடும்பம்,​​ அரசியல்,​​ பண பலம் உள்ளிட்ட எவ்வித பின்புலமும் இன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அந்தப் புரட்சித் தமிழர்.​ விடுதலைப்புலிகளின் முதல்நிலை தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தவர்.​ மலேசிய தமிழர்களால் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல்கொடுத்து வருபவர்.​ அவர் தான் ​ பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி.நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக இருக்கும் ராமசாமி,​​ இப்போது ​ மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார்.​ கோவையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்திருந்தார் ராமசாமி.​ கோவையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை பேட்டிக்காக அணுகினோம்.எளிமையான உடையில் சாதாரண மனிதனைப் போல காட்சி... அவரிடமோ விசாலமான பார்வை,​​ தொலைநோக்கு எண்ணம் பளிச்சிட்டது.​ இனி அவரிடம் பேசியதிலிருந்து..
கல்லூரி பேராசிரியராக இருந்த நீங்கள் அரசியலுக்கு வந்தது எப்படி?​​

அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான்,​​ மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன்.​ மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன்.​ இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன்.​ ஆனாலும்,​​ அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை.​ நேரு,​​ சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன்.​ மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.



உங்களது வெற்றிக்கு பின்புலம் என்ன?​​
2008-ல் மலே​சி​யாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பினாங்கு மாநிலத்தில் பத்துக்காவா மக்களவை தொகுதியிலும்,​​ பிராய் சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு இரு இடங்களிலும் வெற்றி பெற்றேன்.​ நான் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் கோசுங்குனை 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.​ நான் வெற்றி பெறுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.​ எங்களது எதிர்க்கட்சி கூட்டணிக்கு மலாய்,​​ சீனர்கள்,​​ தமிழர்கள் ஆதரவு அதிகரித்ததால் மொத்தமுள்ள 13 மாநிலங்களில் சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக 5 மாநிலங்களைக் கைப்பற்றினோம்.    
அடுத்த இலக்கு என்ன?​​    
          அடுத்து இரு ஆண்​டு​களுக்குள் வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியை நிச்சயம் பிடிப்போம்.​ அங்கு ஆட்சியை பிடிக்க இப்போது எடுத்த வாக்குகளைவிட 10 சதவீதம் கூடுதலாக பெற்றால் போதுமானது.​ மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுதான் இதற்கு காரணம்.5-வது ஈழ விடுதலைப் போராட்டம் சாத்தியமா?​​ஆயு ​தம் தாங்கி போரா​டு​வது கடினமான விடுதலைப் போராட்டம் தான்.​ என்னைப் பொருத்தவரை அரசியல் ரீதியான போராட்டம்தான் சிறந்தது.​ அதற்காகத்தான் நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற அரசியல் ரீதியான,​​ ராஜதந்திரரீதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.​ ​                                                                                                                                 நாடு கடந்த தமிழீழ அரசு சாத்தியமா?​ தனி ஈழம் சாத்தியமா?​​            
                     ஆப் ​பி​ரிக்க நாடான ஈரிடெரியா என்னும் நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கம் நசுக்கப்பட்டது.​ 10 ஆண்டுகளுக்குப்பின் அண்மையில் விடுதலைப் பெற்றது.​ இந்தோனேசியாவில் இருந்து ஈஸ்ட் தைமூர் பிரியும்போதும் பல சிக்கல்களை எதிர்கொண்டது.​ எனவே,​​ இலங்கையில் இது சாத்தியமில்லை என்பதை எப்படி கூற இயலும்.இலங்கையில் இப்போதுள்ள தமிழர்களால்,​​ தமிழர் கட்சிகளால் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க இயலாது.வெளியில் வாழும் தமிழர்களால் தான் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற முடியும்.​ அதற்காகத் தான் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க முயற்சி நடந்து வருகிறது. 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பர்தேஸ் மாநாட்டை புறக்கணித்து ஏன்?​​
இலங் ​கை​யில் ஈழத் தமி​ழர்​கள் கொல்​லப்​பட்​ட​தற்கான காரணங்களில் இந்திய அரசின் நடவடிக்கைகளும் ஒன்று.​ எனவே,​​ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் சரியான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளாதவரை இதுபோன்ற மாநாடுகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்தேன்.​ ​ 

கோவை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் எப்படி செயல்படும்?​​ 

உல ​கம் முழு​வ​தும் 80 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்.​ ஆனால் அனைத்து நாடுகளிலும் 2-ம் தர குடிமக்களாக பாதுகாப்பின்றி வாழ்கின்றனர்.​ தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சந்தித்து அனைத்து நாடுகளுக்கு இடையேயும் உறவுப் பாலம் அமைக்கும் பணியை உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் செய்யும்.​ எந்த நாட்டில் தமிழர்களுக்கு பிரச்னை என்றாலும் இந்த அமைப்பு குரல் கொடுக்கும்.​ ​​ தமிழகத்தில் வேறு தமிழ் தலைவர்களை சந்திக்கும் எண்ணம் உண்டா?​​அடுத்த சில மாதங்​க​ளுக்குப்பின் முதல்வர் கருணாநிதி,​​ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,​​ வைகோ,​​ தொல்.திருமாவளவன்,​​ பழ.நெடுமாறன்,​​ ​ தா.பாண்டியன்,​​ டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பிற தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.​ 
மலேசியாவில் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களுக்குக செய்துள்ள நன்மைகள் எவை?​​ ​​
மலே​சிய அர​சின் நீர் வாரிய தலை​வர்,​​ பினாங்கு வளர்ச்சி குழு​மம்,​​ துணை முதல்வர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறேன்.​ எனது அதிகாரத்தின்கீழ் வரும் அரசு டெண்டர்கள் வரும்போது இந்தியர்கள்,​​ குறிப்பாக தமிழர்கள் பெயர் பட்டியலில் இல்லையெனில் நான் கையொப்பம் இடுவதில்லை.​ மலேசியாவில் இப்போது தான் தமிழர்கள் நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோர முடிகிறது.​ இதுவரை 3 பெரிய தொழில்நிறுவனங்கள் துவக்க அனுமதி அளித்துள்ளேன்.​ மலேசியாவில் வாழும் 16 லட்சம் தமிழர்களில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு குடியுரிமை இல்லை.​ அதில் பலருக்கு குடியுரிமை பெற்று தந்துள்ளேன்.​ தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறேன். 

மலேசியாவில் தமிழ்க் கல்வியின் நிலை பற்றி...பதில்: ​ தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை 1,500-ல் இருந்து 523 ஆக குறைக்கப்பட்டுவிட்டது.​ கடந்த சில மாதங்களுக்கு முன்பு ​ தமிழ் இலக்கியப் படிப்பின் முக்கியத்துவத்தை மலேசிய அரசு குறைத்துவிட்டது.​ தமிழர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க மலேசிய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.​ இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.​ தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சுயமரியாதையுடனும்,​​ சமஉரிமையுடனும்,​​ மனிதனாகவும் மதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது கொள்கை என சற்று கம்பீரமான குரலுடன் பேட்டியை முடித்தார் பேராசிரியர் ராமசாமி.​ ​ 

உலகம் முழுவதும் தமிழர்களால் அறியப்பட்ட பேராசியர் ராமசாமியின் பூர்வீகம் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் தான என்பது ஆச்சரியமான விஷயம்.​ இப்போதைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகேயுள்ள முத்துக்கவுண்டன்வலசுதான் ராமசாமியின் அப்பாவின் கிராமம்.​ அம்மாவுக்கு அதே பகுதியில் உள்ள இலுப்புக்கிணறு கிராமம் தான்.​ ராமசாமியின் பெற்றோர் வறுமை காரணமாக மலேசியாவில் குடியேறினர்.​ மலேசியாவில் பிறந்த ராமசாமி,​​ அங்கேயே பிறந்து வளர்ந்த கலையரசியைத் திருமணம் செய்துகொண்டார்.கலையரசிக்கு நாமக்கல்தான் பூர்வீகம்.

கோவை வந்த ராமசாமி,​​ அவரது மனைவி கலையரசி இருவரும் இலுப்புக்கிணறு கிராமத்துக்குச் சென்று தனது முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை குதுகலத்துடன் சுற்றிப் பார்த்தனர்.​ தனக்கு மைத்துனர் தங்கராஜின் வீட்டில் மதிய உணவு உண்டுவிட்டு,​​ தனது முன்னோர்கள் தரிசித்த 500 ஆண்டு பழமையான கோயிலையும் சுற்றிப் பார்த்தனர் ராமசாமி-கலையரசி தம்பதியினர்.
நன்றி: தினமணி

1 comments:

ஜீவன்சிவம் said...

மிக விரிவான அலசல். நன்றாக இருக்கிறது நண்பரே.
வாழ்த்துக்கள்.